Friday, September 17, 2010

ஓயாத சண்டை

எல்லை எங்கும் பதற்றம்
யார்பக்கம் நியாயம்?  விளங்கவில்லை

ஒருவன் திடமாய் வரதே என்று
விரட்டுகிறான்.
மற்றவன் விட்டேனாபார் என்று
மிரட்டுகிறான்

படைஎடுப்பவனை தூண்டியும் அடக்கியும்
அயலார் இருவர்

இரவுபகல் ஓயாது தொடர்கிறது சண்டை
அவ்வப்போது மாறிமாறி இருவருக்கும் வெற்றி

இவன் இடத்தில் முன்னர் அவன் இருந்தான் என்றும்
அவன் இடத்தை இவன் விழுங்கி விட்டான் என்றும்
அவ்வப்போது அறிக்கை வேறு

வளத்திலும் பலத்திலும் இருவரும் சளைத்தவர் இல்லை
எப்போதும் ஓயாத தீரவே தீராத எல்லைப்பிரச்சனை
இந்த கடலுக்கும் கரைக்கும்.

Monday, September 6, 2010

சுயதொழில் புரிவோரே


உணவு, உடை, உறைவிடம் கருதாது
உலகினில் உலவும் உவகை பாராது
எண்ணத்தில் இலக்கினை ஏற்றியே நாளெலாம்
எருதினை விஞ்சும் ஏற்றம் கொண்டோரே!

விழியினில் கணமும் அயர்ச்சி கொள்ளாது
வழியினில் வளத்தினை நோக்கியே நாளெலாம்
ஓயாமல் உழைக்கும் ஓங்கிய உள்ளங்களே
ஒருநாளும் உமைவெல்ல உலகினில் ஆளில்லை

விற்பனை தொழிலின் விருட்சங்களே நீங்கள்
பணிவாக யான்கூறும் கூற்றினை கேளீரோ?
வெற்றியது விபத்தல்ல வீரத்தின் விளைச்சல்
முதன்மையது இலகல்ல முயற்சியின் முத்து

ஏதோ வாழ்க்கையல்ல ஏற்றமே வாழ்க்கை
வாழவே உறக்கம் உறக்கம் வாழ்வல்ல
வெற்றியை பகிர்ந்துகொள்ள உறவுவரும் அதுவாய்
உறவுகள் மகிழ வெற்றிவராது அதுவாய்

சிறியதோர் வாய்ப்புகளே பெரியதோர் முடிவாகும்
நம்பிக்கை நனவாகும் நம்பிக்கையே நனவாக்கும்
உவகைகொண்டுவிட்டால் உலகையே மாற்றலாமே
உழைப்பு மட்டும் தீர்க்குமளவு இருக்கும்

எண்ணம் மாறுவதாலே வாழ்க்கை மாறும்
வெற்றிபெற கனவும் உழைப்பும் வேண்டும்
திட்டம் மட்டும் போதாது நம்பிக்கை வேண்டும்
பெரிய செயல்களெல்லாம் இவ்வாறே நடந்தன

ஒருநாளை எவ்விதம் கழிக்கிறோமோ - அவ்வாறே
ஒவ்வொருவரும் வாழ்வை கழிக்கிறோம்
உழைப்பு எப்போதும் மகிழ்ச்சி தருவதில்லை - ஆனால்
உழைப்பு இல்லாத மகிழ்ச்சி நிரந்தரமில்லை

மனிதனின் சிறப்பே செய்யாததை செய்வதே
மகிழ்ச்சியின் துவக்கம் வியர்வையே
இலக்கினை மறந்துவிட்டால்
இரட்டிப்பாய் உழைக்கநேரும்

மலைகளுக்குப்பின் மீண்டும் மலைகள் உண்டு
வெற்றிக்குப்பின் மீண்டும் வெல்லவழி உண்டு
சோதனைகளை சாதனையக்குவதே நமது
உண்மை மரபு.

அதிர்ஷ்ட்டம் என்பது முயற்சியும் சந்தர்பமும்
சந்திக்கும் புள்ளியே அன்றி வேறுதுவுமில்லை
உழைக்காமல் இந்தஉலகம் இல்லை
உழைக்காமல் இந்த உலகம் நமக்கில்லை

துணிவது ஆக்கி, தகுதியை தூக்கி,
அயர்ச்சியை நீக்கி, முயற்சியை ஊக்கி,
வெற்றியை கண்டு, விண்ணையும் வென்று,

அனைவரும் உமையே உதாரணமென  கொள்ளும்
வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்.