Thursday, February 2, 2012

போகிக் கவிதை.

போகிக் கவிதை.. 
போக்குவோம் சிலதை...

காஞ்சியில் வேலை முடித்து 
திருச்சிக்கு காரில் புறப்பட்டேன்.
மாலை ஐந்துமணி.

ஓரிரு காதை கடந்த பின்னே 
காரின் அச்சை முரிக்குமோர்
கடும் பள்ளம் சாலையில் கண்டேன்..
ஓரிரு மாதம் கடந்திருக்கும் அந்த
பள்ளம் உருவாகி.. 
யாரின் அலச்சியம் இது?

உத்திரமேரூர் அருகே செல்கையில்,
முன்னே ஒருலாரி தழும்பச் சல்லிஅதில்
அருகே செல்கையில் ஆட்டிய பள்ளத்தால் 
சட்டென ஒருகல் என்கார் கண்ணாடிமீது
யாரிடம் கூறுவது?

அரைமணி நேரம் பயணித்து ஓரிடம்
ஆங்காங்கே கடைகளும் மக்களும் 
விர்ரென ஒருவன் பைக்கில் குறுக்கே
அதிர்ந்து பிரேக் அடித்தேன் பதட்டம் பற்றியது.
யார் அவனுக்கு லைசன்சு கொடுத்தது?

ஒருவேளையாக நெடுஞ்சாலை வந்தது
சர்வதேச மாநாட்டிற்கு செல்லும் தலைவர்போல்
சர்..விர்.. என்று பறக்கும் வாகனங்கள்.
சுங்கச் சாவடியில் முன்னே செல்லவே  
மற்றவனை புறந்தள்ளும் கருங்காலிகள்..
எவண்டா அவன பெத்தான்? 

இருள் மங்கியது கருமை 
விளக்கால் விலகியது ஆங்காங்கே.
உயிரைக் காவுகேட்க்கும் சாலை குண்டர்கள்
ஓட்டுனராய் ஆங்காங்கே..
என்னடா வாழ்க்கை இது? 

இதுல என்கூட வந்தவர் செல்லில் 
யாரிடமோ கூறினார்..
"இவர் இன்னைக்கு புறப்பட்டா 
நாளைக்குத்தான் திருச்சி வருவார்.
அவ்வளவு பயந்தாங்கொள்ளி" - என்று..