Saturday, February 20, 2010

இயற்கை

பூந்தென்றல் சதிராடும் மாலையிலே
பூப்பூவாய்ப் பூத்திடும் சோலையிலே

தாமரைப் பொய்கையில் மீனினங்கள்
தாவிக் குதித்தாடும் மானினங்கள்

இத்தனை சூழ்ந்திடும் வேலையிலே
இளமந்திகள் தாவியே ஆடுதம்மா

ஆடிய ஆட்டத்தில் தேன்துளிகள்
அந்ததாமரைப் பூவினில் வீழ்ந்தவுடன்

செந்தாமரை சிரித்து குலுங்குதம்மா - என்
சிந்தையில் மகிழ்வு பிறந்ததம்மா..

காதலி


சுள்ளென காதினில் சுருதிகள் பாய்ந்திட
மெல்லென கால்களும் மேற்கொண்டு நடந்திட
வில்லென மதியினில் சிந்தைகள் இழுத்திட
கல்லென மனங்கொண்டு மதியத்தில் மயங்கினன்

கண்ணோடு இமைவந்து கடுமையாய் இணைந்திட
விண்ணோடு கலந்திட உயிர்மட்டும் விரும்பிட
மண்ணோடு உடலும் மனத்தோடு ஆசையும்
பன்னோடு  பிரியா இசையென இருந்தனன்

உடலும் உயிரும் உறவின்றி அல்லாட
வயிறும் தொண்டையும் வாட்டத்தில் திண்டாட
பயிரும் பசுமையுமாய் இணைந்திட்ட காதலியின்
பெயர்மட்டும் உச்சரித்தான் அன்பே அன்பே