சுள்ளென காதினில் சுருதிகள் பாய்ந்திட
மெல்லென கால்களும் மேற்கொண்டு நடந்திட
வில்லென மதியினில் சிந்தைகள் இழுத்திட
கல்லென மனங்கொண்டு மதியத்தில் மயங்கினன்
கண்ணோடு இமைவந்து கடுமையாய் இணைந்திட
விண்ணோடு கலந்திட உயிர்மட்டும் விரும்பிட
மண்ணோடு உடலும் மனத்தோடு ஆசையும்
பன்னோடு பிரியா இசையென இருந்தனன்
உடலும் உயிரும் உறவின்றி அல்லாட
வயிறும் தொண்டையும் வாட்டத்தில் திண்டாட
பயிரும் பசுமையுமாய் இணைந்திட்ட காதலியின்
பெயர்மட்டும் உச்சரித்தான் அன்பே அன்பே
No comments:
Post a Comment