Friday, January 29, 2010

முற்பகல் செய்யின்



செழுமையில் பிறந்தான் 
வளமையால் வளர்ந்தான் 
கவலைகள் ஏதுமின்றி 
அகவைகள் கடந்தான் 


வழக்கங்கள் நிறைவேற்ற 
ஏதோபடித்தான் எங்கெங்கோ திரிந்தான்
வயதும் வந்தது வஞ்சியும் வந்தாள்
இல்லறம் துவங்கினான் இலக்கேதும் இல்லாமல்


மனம்போன திக்கில் தினம்போக வாழ
குடும்பஅட்டையில் பட்டியல்நீண்டது 
எட்டுக்குழந்தைகள் வரிசையாய்பெற்று 
ஓட்டும்வயிறுடன் வளர்ந்தன வறுமையில்


எப்படியோ வாழ்க்கை உருண்டது அதுவாய் 
வளர்ந்தபிள்ளைகள் துளிர்த்தன குடும்பங்களாய்
திக்கிற்கொன்றாய் பறந்தன வளர்ந்தன 
ஓரிருவர் தவிர மற்றவர் தொலைவில் 


விடுமுறை பண்டிகை விழாக்கள் விசேஷங்கள் 
நெடுதூர மானாலும் சேர்ந்தனர் குலவினர்
முதுமை வந்தாலும் முதுகினில் பாரங்கள்
பெரியவர் இன்னும் ஓயாது உழைத்தார்


இல்லாள் வல்லானடி சேர்ந்தாள் ஓர்நாள் 
இல்லாதான் கொடுமை தெரிந்தது அவர்க்கு 
வருமானம் மெல்ல நிர்மூல மானதும் 
ஒரு தோளும் இல்லை அவர்சாய..


எல்லா மிருந்தும் இல்லாத வாழக்கையது 
தள்ளாத வயதினில் ஆதரவாய் யாருமற்று 
என்பத் தெட்டுவருட வாழ்கையை பின்னோக்கி 
துன்பத்தில் துடிதுடித்தார் தன்னிடம்ஏதுமின்றி 


கிழவனுக்கும் பெரியவருக்கும் உள்ள வித்தியாசம் - பணமே
பழமிருக்கும் மரப்பறவை வறண்டால் பறக்குமாமே
சேமிப்பது பணமோ அல்லது அன்போ - அது 
உன்கட்டுப்பாட்டில்  இருந்தால்மட்டுமே சிறப்பு.


வேறொருவரை நீ நம்பினால் வருமே வெறுப்பு..


உன் வாழ்க்கை உன் கையில்...

No comments:

Post a Comment