இப்புடி குடுத்துட்டேனே..!
ஒருபெண்ணின் அலறல் மருத்துவமனை அருகில்..
பதைத்து நோக்கினேன்
ஆங்கே ஒருசிறுவன் - சடலமாய்..
வினவினேன் அருகில்..
மூன்றுதிங்களாய் வாந்தியாம்
கன்றுகுழன்று படுக்கையாய் கிடக்கையில்
அவன் சொன்னான் இவன்சொன்னான்
அவள் சொன்னாள் இவள்சொன்னாள் என்று
தள்ளையின் கைவைத்தியம் பிள்ளைக்கு ..
தகப்பனோ பொறுப்பற்று தன்பாட்டிற்கு..
பின்னர்..
முனகல் நின்று அசைவற்று
உடல்குளிர பொருப்புவந்து
ஆஸ்பத்திரி தேடிவந்தார்
அந்த மூளைஅற்ற மூடர்கள்
மனம் களித்து ஊட்டிவளர்த்த கைகளில்
பிணம் சுமந்து சென்றனர் பிணங்களாய்..
No comments:
Post a Comment