ஐந்து வயது வீரன்
உலகையாண்ட நாட்டின்தலை நகரமான லண்டன்
உவகைகொண்ட மக்கள்மிகு விடுதிநிறை லண்டன்
நடனமாடி உயர்பிழைக்கும் மாதுஒரு இடத்தில்
கடமையென நோயிருந்தும் மேடைஏறி நடந்தாள்
வீரர்களும் கலகர்களும் கூடிவரும் சங்கமாம்
மாதிவளின் தளர்ந்தஉடல் கலகமூள விட்டதாம்
கையில்பட்ட பொருளெடுத்து வீசினார்கள் அவள்மீது
தையல்உடல் பெருமளவு நைந்துவிட பொருக்காது
மேடைஇறங்கி அலுவலருடன் பணம்வேண்டி நிற்க
ஓடைபோல ஐந்துவயது அவள்மகனோ மேடையேறி
கோபம்கொண்ட ஆடவரின் அகம்குளிர மழலையால்
வேகங்கொண்டு பாடிவிட அரங்கமெங்கும் கரவொலி
ஐந்துவயதில் சபையேறி ஆரவாரம் கண்டவன்
அகிலம்புகழ் சாப்ளின்எனும் சிரிப்புலக மன்னவன்.
Really interesting but heart breaking
ReplyDelete