As inspired by the poem "You start dying slowly" by Pablo Neruda and as requested by Mr. Vijayaraghavan Kuppusamy; in Tamil.
மெல்லச்சாகிறாய் நீ...
பயணிப்பதை மறந்தாலோ,
படிப்பதைத் துறந்தாலோ,
பூவுலகின் ஓசைகளை
புறக்கணித்துச் சென்றாலோ,
பலேஎன் றுனையேநீ
பாராட்ட மறந்தாலோ,
மெல்லச் சாகிறாய் நீ...
படிப்பதைத் துறந்தாலோ,
பூவுலகின் ஓசைகளை
புறக்கணித்துச் சென்றாலோ,
பலேஎன் றுனையேநீ
பாராட்ட மறந்தாலோ,
மெல்லச் சாகிறாய் நீ...
உனதருமைநீ கொன்றாலோ,
உதவிதருவோரை உதறினாலோ,
மெல்லச்சாகிறாய் நீ...
உதவிதருவோரை உதறினாலோ,
மெல்லச்சாகிறாய் நீ...
பழக்கத்திற்குநீ அடிமையானாலோ,
பாதைமாற்றாது பயணப்பட்டாலோ,
வழக்கங்கள்வழுவி வாழாவிட்டாலோ,
வண்ணம்பலதை அணியாவிட்டாலோ,
புதியவரிடமேநீ பழகாதுபோனாலோ,
மெல்லச்சாகிறாய் நீ...
பாதைமாற்றாது பயணப்பட்டாலோ,
வழக்கங்கள்வழுவி வாழாவிட்டாலோ,
வண்ணம்பலதை அணியாவிட்டாலோ,
புதியவரிடமேநீ பழகாதுபோனாலோ,
மெல்லச்சாகிறாய் நீ...
இருகண்கள் மளிறவேஉன்
இருதயம் எகிறவைக்கும்
தீராக்காதலதை உணராவிட்டாலோ,
அதன்
தீவிரஉணர்வுகளை தீண்டாவிட்டாலோ,
மெல்லச்சாகிறாய் நீ...
இருதயம் எகிறவைக்கும்
தீராக்காதலதை உணராவிட்டாலோ,
அதன்
தீவிரஉணர்வுகளை தீண்டாவிட்டாலோ,
மெல்லச்சாகிறாய் நீ...
மனமகிழாப் பணிமாற்ற
மெனக்கெடாது வாழ்ந்தாலோ,
நிலையற்றவற்றிற்கு
பாதுகாப்பு வழிவிடுத்து
புரிவேனென்ற புதுமுயற்சி புனையாவிட்டாலோ,
கனவைக் கைபிடிக்க
கடைசிவரை செல்லாதுவிட்டாலோ,
ஒருமுறையேனும் உன்னையேநீ
ஓடிப்பாரடாவென உதைக்காவிட்டாலோ,
மேல்லச்சாகிறாய் நீ...
மெனக்கெடாது வாழ்ந்தாலோ,
நிலையற்றவற்றிற்கு
பாதுகாப்பு வழிவிடுத்து
புரிவேனென்ற புதுமுயற்சி புனையாவிட்டாலோ,
கனவைக் கைபிடிக்க
கடைசிவரை செல்லாதுவிட்டாலோ,
ஒருமுறையேனும் உன்னையேநீ
ஓடிப்பாரடாவென உதைக்காவிட்டாலோ,
மேல்லச்சாகிறாய் நீ...
Translation - Prasanna Venkatesan
No comments:
Post a Comment